1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:35 IST)

பாரில் வாக்குவாதம்....மதுபான பாட்டில்களால் தாக்கிக்கொண்ட இளைஞர்கள்!

புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பாரில்  இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது,

புதுச்சேரி அண்ணாசலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கடை மற்றும் உணவு விடுதியில் நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் கேரளா மற்றும்  அருகில் வசிக்கும் புதுச்சேரி  சேர்ந்த இளைஞர்கள், மது அருந்திக் கொண்டிருந்தனர்.
 


இந்த நிலையில், இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பின், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், கேரளா இளைஞர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புதுச்சேரி இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.