1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (20:24 IST)

மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று…

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவிவந்த நிலையில் ஒரளவு பாதிப்புகள் குறைந்துள்ளது,. உயிர்பலிகளும் குறைந்துள்ளது,. விரைவில்  3ஆம் அலை பரவவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளது.

இன்று கேரளாவில் மேலும் 5  பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உருதியாகியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 56 பேருக்கு ஜிகா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்