செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (19:48 IST)

மல்லையா திவாலானார்… நீதிமன்றம் அதிரடி..சொத்துகள் முடக்கம்

இந்தியாவில் பிரபல தொழிலதிபர்  விஜய் மல்லையா. இவர் எஸ்.ஐ.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினார். இவர் எங்கு இருக்கிறார் என இந்திய  போலீஸார் தேடிவந்தபோது, இங்கிலாந்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

 எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த வேண்டுமென இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், தப்பிச் சென்ற விஜய் மல்லையா திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதையத்து, வங்கிகள் தங்களின் பணத்தை மீட்டு எடுக்க முடியும் என தகவல் வெளியாகிறது. இத்தீர்ப்பை அடுத்து, அமலாக்கத்துறையின் விஜய் மல்லையாவின் ரூ.14,000 கோடி மதிப்புள்ளா சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது.