தொடர்புடைய செய்திகள்
- ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா! – கன்னியாக்குமரியில் அதிர்ச்சி!
- 1.50 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்
- தடுப்பூசிகள் மூலம் இந்தியாவில் நுழைய ஜான்சன் அண்டு ஜான்சன் கடும் போராட்டம்!
- கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க இந்தியா தவறியது எப்படி?
- முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!
ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா !
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,53,21,089 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 188 பயணிகளில் 20% பேருக்கு கொரோனா என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
