தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க இந்தியா தவறியது எப்படி?
- அலைமோதும் கூட்டம் ... ரயில் நிலையங்களில் புது அறிவிப்பு!
- டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் சிஸ்டம்… மாலை 4 மணிவரை மட்டுமே வழங்கப்படுமாம்!
- தமிழகத்தில் இன்று அமலாகும் முக்கிய கட்டுப்பாடுகள்...
- இரண்டு ஓவர்களுக்கு ஒருமுறை பந்தை மாற்றவேண்டும்… கே எல் ராகுல் கருத்து!
1.50 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,53,21,089 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 20,31,977 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
