1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. 59% population yet to link aadhaar with PAN number

இணைக்கப்படாத ஆதார் - பான் எண்: 59% மக்களின் நிலை??

ஆதார் எண்
வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இதுவரை 14 கோடி பேர் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 115 கோடி மக்களிடம் ஆதார் கார்ட் உள்ளது. 33 கோடி பேருக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆதார் - பான் இணைப்பு திட்டத்தின்படி இதுவரை 41% மக்களின் பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் பான் எண் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மீதமுள்ள 59 சதவீத மக்களின் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைக்கப்படவில்லை. இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
 
ஆனால், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ரத்து செய்துள்ள மத்திய அரசு புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பாஜகவுடன் இணைந்தால் அதிமுக ஊழலே செய்யாது; தமிழிசை