தொடர்புடைய செய்திகள்
- ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்ட கெய்ல் – அதனல் அபராதம் கட்டும் யுனிவர்ஸல் பாஸ்!
- 1000 -சிக்ஸர்கள் அடித்த டாப் -10 வீரர்கள் பட்டியலில் ஒரே இந்தியர் !
- முதல்ல பவுலிங் போட்டு ரன்னை குறைப்போம்; நெக்ஸ்ட் சேஸிங்! – டாஸ் வென்ற மும்பை வியூகம்!
- கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என் லவ்வர் வந்துடட்டும்! – மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்!
- வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி; விட்டுக்கொடுக்குமா மும்பை?
ப்ளே ஆஃப் போவது யார்? இன்று இறுதிக்கட்ட பரபரப்பில் மூன்று அணிகள்!
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபில் போட்டியின் இறுதி கட்ட ஆட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில் ப்ளே ஆஃப் செல்ல அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் பங்குபெறும் நான்கு அணிகளில் சிஎஸ்கே தவிர மற்ற மூன்று அணிகளும் ப்ளே ஆஃபிற்காக போராடி வருகின்றன. இன்று விளையாடும் கிங்ஸ் லெவன், நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்று அணிகளும் இதுவரையிலான 13 ஆட்டங்களில் 6ல் வெற்றியும் 7ல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் பெற்று 5,6 மற்றும் 7 ஆகிய இடங்களில் உள்ளன.
சிஎஸ்கே ப்ளே ஆஃப் தகுதியில் இல்லை என்றாலும் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினால் மட்டுமே கிங்ஸ் லெவன் ப்ளே ஆஃப் முன்னேற முடியும். இந்த சீசன் முழுவதும் மிகப்பெரும் போராட்டங்களையும், நூலிழை தோல்விகளையும் சந்தித்து வந்த கிங்ஸ் லெவன் இந்த முறை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம் இரண்டாவது போட்டியான நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியானது ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயும் போட்டியாக பார்க்கப்படுகிறது. இருவருக்குமே வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் இந்த போட்டியும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்