தொடர்புடைய செய்திகள்
- ஹிட்மேன் இல்லாத டீமா..? கொந்தளித்த ரசிகர்கள்! – பிசிசிஐ எடுத்த முடிவு!
- வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி; விட்டுக்கொடுக்குமா மும்பை?
- 1001 சிக்ஸர்கள் அடிச்சிருந்தாலும்.. உங்களை ஏமாத்திட்டேன்! – ரசிகர்களிடம் க்ரிஸ் கெயில் உருக்கம்!
- ஐபிஎல்-தொடரிலிருந்து தோனி ஒய்வு??? வீரர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்தது ஏன்??
- இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார் – ஓவர் கான்பிடன்ஸில் நெக்ரா!
முதல்ல பவுலிங் போட்டு ரன்னை குறைப்போம்; நெக்ஸ்ட் சேஸிங்! – டாஸ் வென்ற மும்பை வியூகம்!
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 25 போட்டிகளில் மோதிக் கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் டெல்லி 13 முறையும், மும்பை 12 முறையும் வென்றுள்ளன. இதனால் இன்றைய ஆட்டம் 50/50 என்ற வெற்றி வாய்ப்பிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை செல்ல வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இரண்டு அணி டாப் ஆர்டர் பேட்டிங் உள்ளிட்டவற்றில் பெரிதாக மாற்றங்கள் இல்லாவிட்டாலும், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள மும்பை அணி ரன் ரேட்டை குறைத்து பிறகு சேஸிங் செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பையின் கை கொடுக்கும் இந்த வியூகம் டெல்லியிடம் முந்தைய ஆட்டத்திலும் செல்லுபடியாகி இருக்கிறது. அப்போது டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்