1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Third T20 Today in Rajkot will india seize the series

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டி 20 போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது போட்டி 25 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்.

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலும் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!