தொடர்புடைய செய்திகள்
- நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதி பூண்டுள்ளோம்.. டிரம்ப் உடன் பேசியபின் மோடியின் பதிவு..!
- ஷமி எப்போது அணியில் இடம்பெறுவார்?… பயிற்சியாளர் சிதான்ஷு அளித்த பதில்!
- மருத்துவர் சொன்னால்தான் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியும்.. அதிர்ச்சி தகவல்!
- இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
- ஏன் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷமி களமிறங்கவில்லை?… வெளியான தகவல்!
இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் டி 20 போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது போட்டி 25 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.
இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலும் இளம் வீரர்களைக் கொண்ட டி 20 அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.