1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav will play first two odi against australia

“சூர்யகுமாருக்கு எங்க ஆதரவு எப்போதும் உண்டு…” ஆஸி. தொடரில் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட்!

சூர்யகுமார் யாதவ்
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது அரிதுதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடங்கும் ஆஸி அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பளிப்பது பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில் “எப்போதும் எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு. அவர் கண்டிப்பாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.” எனக் கூறியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு