தொடர்புடைய செய்திகள்
- அடுத்த சீசனிலும் “தல” தோனிதான் கேப்டன்! – சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
- இலங்கை ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் கேள்வி: "ஓய்வு வயது குறைப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?"
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு: கடைசி தீர்ப்பு என்ன தெரியுமா?
- மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்? வெளியான தகவல்!
- சினிமாவில் இருந்து விரைவில் ஓய்வு… நடிகர் விக்ரம் திடீர் அறிவிப்பு
ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வா?
சுரேஷ் ரெய்னா கடந்த ஐபிஎல் சீசனில் எந்தவொரு அணியாலும் ஏலம் எடுக்கப்படாததால் வரணனையாளராக பணியாற்றினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. இதனால் அவரை இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை உள்பட எந்த அணியும் எடுக்கவில்லை.
இதனால் இந்தி வரணனைக் குழுவில் அவர் பணியாற்றினார். இந்நிலையில் இப்போது அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.