தொடர்புடைய செய்திகள்
- மரணக் காட்டு காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்… ஆஸிக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!
- இலக்கு 400 ரன்கள்.. 35 ரன்களில் 2 விக்கெட் இழப்பு.. தடுமாறும் ஆஸ்திரேலியா..!
- இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!
- ஆசிய போட்டியில் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி.
- நீ குடுத்தத திரும்ப குடுப்பேன்.. பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா! – IND vs Aus இரண்டாவது ஒருநாள் போட்டி!
“கோலிதான் பெஸ்ட்… அவர்கிட்ட இருந்து அத நான் எடுத்துக்க முடியாது…” –ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார். ஆட்டநாயகன் விருதைப் பெற்ற அவர் தொடர் காயங்களில் இருந்து மீண்டு வந்தது பற்றி பேசியுள்ளார்.
அவரது உரையில் “இது ஒரு ரோலர்கோஸ்டர் சவாரி, அற்புதமான உணர்வு. எனது அணியினர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் டிவியில் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் போட்டிகளில் பங்கேற்க விரும்பினேன். என்னை நம்பியதற்கு நன்றி. வலி மற்றும் சில பிரச்சனைகள் தொடர்ந்து வந்தன, ஆனால் நான் எதை நோக்கமாகக் கொண்டேன் என்று எனக்குத் தெரியும். இன்று எனது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. அடிப்படையில் நான் பேட்டிங் செய்ய சென்றபோது, விஷயங்களை சிக்கலாக்க விரும்பவில்லை.
நான் நெகிழ்வானவன், எந்த நிலையிலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன், எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். விராட் கோலி மூன்றாம் இடத்தில் சிறந்தவர்களில் ஒருவர், அவரிடமிருந்து அந்த இடத்தைத் திருட வாய்ப்பே இல்லை. நான் எங்கு பேட் செய்தாலும் (எந்த நிலையிலும்) தொடர்ந்து ஸ்கோரை அடிக்க வேண்டுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்