1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shikar dhawan talked about shubman gill selection

நானாக இருந்தால் கூட ஷுப்மன் கில்லைதான் தேர்வு செய்வேன்… ஷிகார் தவான் பெருந்தன்மை!

ஷிகார் தவான்
இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் கடந்த சில மாதங்களாகவே இடமளிக்கப்படவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இஷான் கிஷான் சமீபத்தில் சிறப்பாக விளையாடியது காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்திய அணிக்காக பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தவான் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரையாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவு அநியாயமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள தவான் “ நான் தேர்வுக்குழுவில் இப்போது இருந்தால் சுப்மன் கில்லுக்குதான் முன்னுரிமை வழங்குவேன். அவர் இப்போது சிறந்த பார்மில் விளையாடி வருகிறார். அதனால் அவர்தான் சிறந்த தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஜடேஜாவுக்கு லக்.. கே.எல்.ராகுலுக்கு செக்..! – க்ரேடை மாற்றிய பிசிசிஐ!