தொடர்புடைய செய்திகள்
- கோலியா? ஜெய்ஸ்வாலா?... ரோஹித்தோடு ஓப்பனிங் இறங்கப் போவது யார்?
- “இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!
- 50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!
- இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!
- இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?
“கோலி & ஜெய்ஸ்வால் ஓப்பனர்களாக விளையாடவேண்டும்…” முன்னாள் வீரர் சொல்லும் காரணம்!
ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்னும் விராட் கோலி அமெரிக்கா செல்லவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கோலியும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இதுவரை ரோஹித் ஷர்மா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இருப்பதால் அது சாத்தியமா என தெரியவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர், “ரோஹித் சுழல்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். அதனால் அவருக்கு மூன்றாவதாக அல்லது நான்கவதாக ஆடலாம். அவருக்கு அதில் சிரமம் இருக்காது.” எனக் கூறியுள்ளார்.