1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma decided playing eleven for Pakistan match

“பாகிஸ்தானுக்கு எதிரான ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்” கேப்டன் ரோஹித் தகவல்!

பாகிஸ்தான்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக விளையாட உள்ள வீரர்கள் யார் என்பதை நான் இப்போதே தீர்மானித்து விட்டேன் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் “வீரர்களிடம் கடைசி நிமிடத்தில் நீ விளையாட போகிறாய் என சொல்ல நான் விரும்பவில்லை. அனைத்து வீரர்களிடம் இதுகுறித்து நான் பேசிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!