தொடர்புடைய செய்திகள்
- மேலும் 9 கட்சிகள்.. டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் தலைமையகம்! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
- 'இந்தியா' கூட்டணியின் கூட்டம் தொடங்கியது...
- I.N.D.I.A. கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம்: மும்பை கிளம்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்..!
- மும்பையில் நடைபெறும் I.N.D.I.A 3வது ஆலோசனை கூட்டம்.. முக்கிய தகவல் வெளியீடு..!
- கோலியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற திட்டமா?... பிசிசிஐ ப்ளான் வொர்க் அவுட் ஆகுமா?
கடவுளுக்கு நன்றி… பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட ரிஷப் பண்ட்!
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவரால் ஒரு ஆண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை அவரால் விளையாட முடியாமல் போனது. அதே போல உலகக் கோப்பை தொடரையும் அவர் மிஸ் செய்யவுள்ளார்.
இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிவரும் ரிஷப் பண்ட் தான் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு “இருட்டின் பாதையில் மிகச்சிறிய வெளிச்சத்தையாவது காட்டியதற்கு கடவுளுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.