தொடர்புடைய செய்திகள்
- பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!
- நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன்… ஆனால் அவர்கள் அற்புதம் செய்துவிட்டார்கள் – கே எல் ராகுல் பாராட்டு!
- காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!
- அடிலெய்ட் டெஸ்ட்டுக்கான ஆஸி அணி அறிவிப்பு… உள்ளே வந்த ஸ்காட் போலண்ட்!
- பேட்ஸ்மேன்களைக் குறை சொன்னதால் நீக்கப்பட்டாரா ஹேசில்வுட்.. கவாஸ்கர் கருத்துக்கு ஆஸி முன்னாள் வீரர் பதில்!
லக்னோ அணிக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அறிவித்தார் சஞ்சய் கோயங்கா!
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டார். கடந்த ஆண்டு ராகுலுக்கும் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை. லக்னோ அணியில் ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளதால் இன்னும் கேப்டன் யார் என முடிவு செய்யவில்லை என சஞ்சய் கோயங்கா சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார்.
இந்நிலையில் இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதியக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அவர் அறிவித்துள்ளார். தோனி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரையும் கேப்டனாக நியமித்து பின்னர் அவர்களை அவமரியாதையாக நடத்தினார் கோயங்கா என்ற எதிர்மறையான பிம்பம் அவர் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்