தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இப்படி நடத்தக் கூடாது… ரோஹித் ஷர்மா சொல்லும் ஐடியா!
- இந்தியாவின் டெஸ்ட் தோல்விக்கு ஐபிஎல் காரணமா? – ராகுல் ட்ராவிட் கருத்து!
- மொத்த விக்கெட்டும் காலி.. வாகை சூடிய ஆஸ்திரேலியா! – கனவாய் போன இந்தியாவின் ஆசை!
- அம்பயரே கேட்ச்ன்னு ஒத்துக்கிட்டார்.. நான் என்ன தப்பு செஞ்சேன்? – கேமரூன் க்ரீன் கருத்து!
- இது ஏமாற்று வேல.. நியாயமே இல்ல! சுப்மன் கில் அவுட் குறித்து ரசிகர்கள் ஆவேசம்!
ரோஹித் ஷர்மாவின் கருத்தைக் கிண்டல் செய்த ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்!
நேற்று நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் பட்டத்தை கை நழுவ விட்டுள்ளது இந்தியா.
போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டுமே நடக்கக் கூடாது” என இரு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
இதுபற்றி ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்ட போது “3 போட்டிகள் கொண்ட தொடர் என்ன? 16 போட்டிகள் கொண்ட தொடராகக் கூட நடத்தலாம். ஆனால் ஒலிம்பிக்கில் எல்லாம் ஒரு போட்டியாகதான் நடத்தப்படுகிறது. அதில்தான் வீரர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என நக்கலாக பதில் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்