வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:49 IST)

கிரிக்கெட்டிற்குள் மீண்டும் களமிறங்கும் மேக்ஸ்வெல், மாடின்சன்

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல், மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தற்போது விக்டோரியா பிரிமீயர் லீக் நடைபெற்று வரும் நிலையில் மேக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காகவும், மாடின்சன் செயிண்ட் கில்டா அணிக்காகவும் விளையாடி உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளார்.

மேலும் மாடின்சன் அந்த போட்டியில் 58 ரன்கள் குவித்துள்ளார். இருவரும் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் களமிறங்கியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.