1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jofra archer becomes most runs given bowler in IPL

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

SRH vs RR
ஐபிஎல் தொடர் தொடங்கி ரசிகர்களை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் பவுலிங் எடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்துக் குவித்தது. இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் சதமடித்துக் கலக்கினார்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் கம்பேக் கொடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வள்ளலாக மாறினார். அவர் பந்தில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினர் SRH பேட்ஸ்மேன்கள். இந்த இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி ஆர்ச்சர் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் விட்டுக்கொடுத்த மிக அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையை இதன் மூலம் ஆர்ச்சர் படைத்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
வழக்கம்போல் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே... தொடரும் மும்பையின் சோகம்..!