1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India will not get incentive for southafrican series

இந்திய அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது: கிரிகெட் வாரியம் அதிரடி

இந்தியா
தென்னாப்பிரிக்காவை சொந்தமண்ணில் வீழ்த்தி சாதணை படைத்த இந்திய அணிக்கு ஊக்கத் தொகை வழங்கபடாது என கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி வரலாறு சாதனை படைத்தது.
 
இந்த வரலாற்று வெற்றிக்காக. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கன்னா, இந்திய அணி வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்க கோரி, கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுக்கு கடிதம் எழுதினார்.
 
இந்த கடிதத்துக்கு கிரிக்கெட் வாரிய குழு அளித்த பதிலில், ஐ.சி.சி தொடர் போட்டிகளில் மட்டும் தான் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மற்ற தொடர் போட்டிகளில் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது என பதிலளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்திய அணிக்கு திரும்ப கேப்டன் பதவி உதவுமா? அஸ்வின்