செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (17:08 IST)

நாளை இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா அணி டி20 தொடரை வென்றதை அடுத்து நாளை இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
 
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டி20 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
 
இந்நிலையில், இரு-அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
 
அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:
 
இந்தியா:  விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, தோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், அக்‌ஷர் படேல்.
 
இங்கிலாந்து: மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், மொய்ன்அலி, பென்ஸ்டோகஸ், ஜோரூட், ஜேக்பால், டாம் குர்ரான், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட், புளுன்கெட்.