தொடர்புடைய செய்திகள்
- கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!
- இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!
- இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?
- ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!
- கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்
இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு… கம்பீருக்கு இன்று சம்பிரதாய நேர்காணல்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அவருக்கான நேர்காணல் காணொளி மூலமாக நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்பீர்தான் அடுத்த பயிற்சியாளர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இந்த நேர்காணலானது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது.