வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டியாக கேப்டன் பட்டியலில் இளம் வீரரை பரிந்துரைத்த கம்பீர்!

டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள கவுதம் கம்பீர் “ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டன்தான். ஆனால் அவருக்கு போட்டியான கேப்டன் வீரர் என்றால் நான் பிருத்வி ஷாவைதான் சொல்வேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் பிருத்வி ஷா, கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடமே கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.