வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (22:40 IST)

''தோனி வருகையால் 40 ஆயிரம் சீட்டும் நிரம்பி வழியும்''- சென்னை கிங்ஸ் சி.இ.ஓ தகவல்

இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியன்று, மைதானம் நிரம்பி வழியும் என்று சென்னை அணியின் சி.இ.ஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

ஐபிஎல் போட்டித் தொடரில், தோனி தலைமையிலான சென்னை அணி மிக வலுவாக உள்ளதாலும், மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த   நிலையில், தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்,   4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. தலைவன் தோனி வருகிறார். அதனால், சொல்ல வேண்டும், அங்குள்ள 40 ஆயிரம் சீட்டும் நிரம்பி வழியும் என்று சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வ நாதன் தெரிவித்துள்ளார்.