1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

“கிரவுண்ட்ட பத்தி நல்லா தெரிஞ்சும் இந்த தப்ப பண்ணிட்டோம்”… தோல்வி குறித்து தோனி ஓபன் டாக்!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தியில் மூன்று ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த மூன்று ரன்கள் அடித்து பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுக்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மைதானத்தில் சி எஸ் கே அணி இவ்வளவு பெரிய இலக்கை தோற்றது ரசிகர்களுக்கு அதிருப்தியான ஒன்றாக அமைந்தது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி புள்ளிப் பட்டியலும் பின்னிறங்கியுள்ளது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் தோனி “மைதானத்தின் தன்மை நன்கு தெரிந்தும் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. இடைப்பட்ட ஓவர்களில் இன்னும் சிறப்பாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி இருக்கவேண்டும்.” எனப் பேசியுள்ளார்.