1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:48 IST)

தோனி வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு…

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பில் நிகழ்சி நடத்துவதாகக் கூறி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கை மேலும் 2 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறி பரப்பி நிகழ்ச்சி பரப்பியதற்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி ஒரு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் இதை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவுள்ளது, தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.