தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
- சென்னையில் அனுமதியின்றி பேரணி.. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!
- போலீஸை கத்தியால் குத்திய சூர்யா! துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ மீனா! – சென்னையில் பரபரப்பு!
- தொடர்ந்து சரிந்து வரும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
சி எஸ் கே அணிக்கு நல்ல செய்தி… முழு உடல்தகுதியுடன் திரும்பும் வீரர்!
சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் தீபக் சஹார். ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் தனித்துவம் மிக்கவராக தீபக் சஹார் செயல்பட்டு வந்தார்.
கடந்த ஆண்டு சென்னை அணியின் மோசமான தோல்விக்கு தீபக் சஹார் இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது என்று கூறலாம். இந்நிலையில் இப்போது 100 சதவீத உடல்தகுதியோடு தான் இருப்பதாக தீபக் சஹார் கூறியுள்ளார்.
காயங்களில் இருந்து மீள கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ள அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முழு தகுதியுடன் தயாராகி வருவதாகக் கூறியுள்ளார்.