தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை: பும்ரா முதலிடம்!
- அந்த பையன இயல்பான ஆட்டத்த விடுங்கப்பா... ஜெய்ஸ்வால் குறித்து கம்பீர் கருத்து!
- தொடருக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
- டி-20 கிரிக்கெட் தொடர்: ஜிம்பாவே செல்லும் இந்திய அணி!
- தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் தேர்வுக்குழு… மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?
கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைக்கும் ஒரே இந்திய வீரர் பும்ராதான்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பௌலர் பும்ரா 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, மூன்றாவது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை எட்டியுள்ளார். ஏற்கனவே டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை அவர் ஏற்கனவே வகித்துள்ளார்.
இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்பர் 1 வீரராக இருந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.