1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:52 IST)

இந்தியா வாய்ப்புகளுக்கான இடமாகும்… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐதராபாத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் இந்தியா வாய்ப்புகளுக்கான இடமாகும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்ட போது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை எங்களால் முடிந்த அளவுக்குக் கொடுக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன். அதிரடியாக விளையாடியதில் எங்களுக்கு வெற்றிகள் கிடைத்தன. இப்போது அதிரடியாக விளையாட இந்தியாவைத் தவிர வேறு இடம் எங்கு உள்ளது. இந்தியாவின் 20 விக்கெட்டுகளை நாங்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் வீழ்த்த வேண்டும். அதே போல பேட்டிங்கில் இந்தியாவை விட ஒரு ரன் கூடுதலாக பேட்டிங் அடிக்க வேண்டும். இந்த தொடர் கடும் சவால்களைக் கொடுக்கும். அதனால் இந்த தொடர் எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.