தொடர்புடைய செய்திகள்
- என் ஒட்டுமொத்த கிரிக்கெட் கேரியரில் செய்ததை ஒரே இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் செய்துவிட்டார்- அலெஸ்டர் குக் ஜாலி கமெண்ட்!
- 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுதான் இரண்டாவது முறை… சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
- ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. இமாலய இலக்கு.. இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிவு..
- “நீ எறங்கி ஆடு.. இது நம்ம காலம்!” - மீண்டும் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால்!
- அடிச்சு சொல்றேன்.. அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றிதான்! – கார்த்திக் சிதம்பரம்!
கிரிக்கெட்டில் இருந்து இந்த விதியை நீக்கவேண்டும்… பென் ஸ்டோஸ் கருத்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக மோசமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலரின் விக்கெட்கள் சர்ச்சைகள் கிளப்பின.
இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “கிரிக்கெட்டில் இருந்து அம்பயர்ஸ் கால் என்ற முறையை முழுவதும் நீக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை பந்து ஸ்டம்ப்பில் படுகிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். இதைப் பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் தோல்வி பெற்றதால் புலம்புவதாக பலரும் நினைக்கலாம். ” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்