1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (07:45 IST)

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேபட்ன் ஷாகித் அப்ரிடி பாபர் அசாம் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஷாகீன் அப்ரிடியிடம் இருந்து கேப்டன்சி பொறுப்பை மீண்டும் பாபரிடம் தேர்வுக்குழு கொடுத்த போது அதை அவர் மறுத்திருக்க வேண்டும். அப்போது அவர் நான் ஷாகீனுக்குக் கீழ் விளையாட தயாராக இருக்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவர் மேல் மரியாதை உருவாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.