தொடர்புடைய செய்திகள்
- கே கே ஆர் பவுலர்களிடம் சரணடைந்த பேட்ஸ்மேன்கள்.. எளிய இலக்கை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ்!
- என்னது ரோஹித் இம்பேக்ட் ப்ளேயரா?... மீண்டும் ஆட்டிட்யூட் காட்டி ரசிகர்களிடம் கெட்ட பேரை சம்பாதிக்கும் ஹர்திக்!
- மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் அபாரம்… தட்டுத் தடுமாறி டீசண்ட்டான ஸ்கோரை எடுத்த கே கே ஆர்!
- டாஸ் வென்ற மும்பை எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!
- வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ்… கே கே ஆர் அணியோடு பலப் பரீட்சை!
மீண்டும் டாஸை ஏமாற்றியதா மும்பை இந்தியன்ஸ்?… கிளம்பியது அடுத்த சர்ச்சை!
கடந்த ஏப்ரல் 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார். அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக ஒரு வீடியோவும் வைரலானது. இது சம்மந்தமான வீடியோ வைரலாகி சர்ச்சைக் கிளம்பியது.
மும்பை இந்தியன்ஸ் அணியினர் ரெப்ரியை விலைக்கு வாங்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டாஸ் போடும் போது டாஸ் காயினுக்கு நேரடியாக கேமரா க்ளோஸ் அப் வைக்கப்பட்டு டாஸின் முடிவு ரசிகர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. அந்த சர்ச்சைக்குப் பிறகு அனைத்துப் போட்டிகளும் அவ்வாறு காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதுபோல காட்டாமல் நேரடியாக ஹர்திக் பாண்ட்யா டாஸ் ஜெயித்ததாக ரெப்ரி அறிவித்தார். இதனால் மீண்டும் டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்