இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி திரைப்படங்கள் போன்றவற்றை இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதற்கான அரசாணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கிறார். ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்கள், இன்டர்நெட் உலகில் இதுவரை நிலவி வந்த கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மாறுகிறதா என்ற சர்ச்சையை இந்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில், இந்திய பத்திரிகை கவுன்சில் அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்துகிறது. செய்தி...