1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Roja says hindi is compulsory for people

இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும்: அமைச்சர் ரோஜா!

Roja
தாய் மொழியோடு ஹிந்தியையும் கட்டாயம் படிக்க வேண்டும் என ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார் 
 
நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நடிகை ரோஜா அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது தாய் மொழியோடு ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் தேவை என்றும் அனைத்து மொழிகளையும் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் தெரிவித்தார்
 
மத்திய அமைச்சர்கள் பலரும் ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் நமது மாநிலத்திற்கு தேவையானதை பெற்றுக் கொள்வதற்கு இந்தி கட்டாயம் தேவை என்று அவர் தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியை மக்களிடம் திணிக்கக் கூடாது என்றும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
குழந்தைக்கு பெயர் வைப்பதான் முழு நேர வேலை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!