சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (07:42 IST)

கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றிலிருந்து தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவ படைகள் தாக்கி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கீவ் நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அரசு தற்போது கீவ் நகரில் ஒரு இந்தியர் கூட இல்லை என அறிவித்துள்ளது 
 
இருப்பினும் கார்கிவ் உள்பட இன்னும் ஒரு சில நகரங்களில் இந்தியர்கள் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.