1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The government bus collided with the barrier on the road!

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

government bus
வேலூர் மாவட்டம்  பேரணாம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனராக வாணியம்பாடி வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரும் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர்
இந்த நிலையில் பேரணாம்பட்டிலிருந்து குடியாத்தம் வழியாக
பள்ளிகொண்டா சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது  வேப்பூர் அருகே சாலையில் அருகே உள்ள தடுப்பின் மீது அரசு பேருந்து மோதி விபத்து உள்ளானது.
 
இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து சாலையின் அருகே இருந்த தடுப்பின்  மீது மோதி முன்பக்க டயர் கழன்று விழுந்து அரசு பேருந்து சாய்ந்து நின்றது இதில் சில பயணிகளுக்கு  லேசான காயம் ஏற்பட்டது அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
About Writer
J.Durai
அடுத்த கட்டுரையில்
மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்