சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுற்றுலா தலமான ஏற்காட்டில் வருகிற 28-ந் தேதி கோடை விழா துவ்ங்க உள்ளது. மலர் கண்காட்சி, படகுப் போட்டி களை கட்ட உள்ள இந்த கோடை விழா 30ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இத்தகவலை மாவட்ட வருவாய் அதிகாரி கலையரசி தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை...