1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:28 IST)

தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவு… முன்னணி வீரர் உலகக் கோப்பையில் இருந்து விலகல்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்துள்ளன. மேலும் இப்போது அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்க்யா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முழுமையான உடல்தகுதிப் பெறாமல் இருந்து வந்தார்.

தொடர்ந்து அவரைக் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் இப்போது அவரின் காயம் முழுமையாக குணமாகததால் அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.