ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:50 IST)

அடுத்த ரவுண்டுக்கு எல்லாரும் ரெடியா? – உலக சுகாதர அமைப்பு பகீர் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை பல லட்சம் மக்களை பலி கொண்டுள்ளது. பல கோடி மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுவது மேலும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனா முடிவு அல்ல, அடுத்ததாக வரவிருக்கும் பெரும் தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

கொரோனாவிற்கே சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் புதிய தொற்றை எப்படி எதிர்கொள்வது என பல நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.