தொடர்புடைய செய்திகள்
- ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-ன் தாய் நிறுவனத்தில் இருந்து 11000 ஊழியர்கள் பணி நீக்கம்!
- Community Feature… வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்!
- வீடியோ காலில் தொல்லை செய்த பெண்: எம்.எல்.ஏ போலீசில் புகார்!
- டெலிகிராமுக்கு போட்டியாக மாறிய வாட்ஸ் ஆப் !
- நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்.. வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய அம்சம்!
ஒரு வாட்ஸப்பை இரண்டு மொபைலில் யூஸ் பண்ணலாம்? – வாட்ஸப் புதிய அப்டேட்!
உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் சாட்டிங் செயலியான வாட்ஸப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது.
உலகம் முழுவதும் அதிகமானோரால் சாட்டிங் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் செயலிகளில் முன்னணியில் வாட்ஸப் செயலி இருக்கிறது. நாளுக்கு நாள் வாட்ஸப் சேவைகளை மேம்படுத்திக் கொண்டே வருகிறது அதன் தாய் நிறுவனமான மெட்டா.
தற்போது வாட்ஸப்பில் பணம் செலுத்தும் வசதி முதற்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸப்பை மொபைலில் மட்டுமல்லாமல் கணினியிலும் பயன்படுத்தும் வகையில் லிங்க் டிவைஸ் ஆப்சன் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே சமயத்தில் 4 கணினிகளில் ஒரு வாட்ஸப் கணக்கை இணைத்து வைத்துக் கொள்ள முடியும்.
தற்போது ஒரு வாட்ஸப் கணக்கை இரண்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் கம்பேனியன் மோர் என்ற புதிய வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளொயாகியுள்ளது. க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து இரண்டு மொபைல்களில் ஒரே வாட்ஸப்பை பயன்படுத்தும் இந்த வசதி வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
