1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:17 IST)

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் திடீர் மாற்றம்: வெளியுறவுத்துறை அறிவிப்பு!

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் திடீர் மாற்றம்: வெளியுறவுத்துறை அறிவிப்பு!
உக்ரைனுக்கான இந்திய தூதரகம் மாற்றப்படுவதாக திடீரென வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை இந்தியா அழைத்து வரும் பணியை செய்து முடித்துள்ள நிலையில் தற்போது அதிரடியாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை போலாந்து நாட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது 
 
உக்ரைன் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தூதரகம் தற்காலிகமாக மாற்றப்படுகிறது என்றும் போர் முடிவுக்கு வந்ததும் மீண்டும் உக்ரைனுக்கு தூதரகம் மாற்றப்படும் என்றும் வெளியுறவுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது முற்றுப்புள்ளி