1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. three thousand people killed in iran war

3 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஈரான் போர்!.. முடிவுக்கு வருமா?..

iran war
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. பிப்ரவரி மாதம் 28ம் தேதி துவங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த நிலையில் நேற்றுதான் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் ஒத்துக் கொண்டது.

போர் துவங்கியபோதே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன்பின் அவரின் மகன் பொறுப்புக்கு வந்திருக்கிறார். போர் காரணமாக ஈரான் தனது கடல் வழி பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டுவரும் கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது..

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி ஈரானில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக ஈரான் தடவில் துறை அறிவித்திருக்கிறது.. மேலும், இறந்தவர்களில் 40 சதவீத பேரின் உடல்களை அடையாளம் காண தடவியல் பணிகள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாக்கில் அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே போர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.. இதில் நிரந்தர முடிவு எட்டப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டாலும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. லெபனானை தொடர்ந்து தாக்கியதில் நேற்று 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரியில் 86.92% வாக்குப்பதிவு.. இளைஞர்கள் எல்லோரும் விசிலுக்கு குத்திட்டாங்களோ?