1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (16:34 IST)

இலங்கையின் 9ஆம் தேதி செண்டிமெண்ட்: மஹிந்தா, பசில், கோத்தபயா!

srilanka
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக அரசுக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர் என்பதும், இந்த போராட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதி ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டத்தின் பயனாக மே 1ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார் 
 
இதனை அடுத்து ஜூன் 9-ஆம் தேதி மகிந்தவின் மகன் பசில் ராஜபக்ஷ பதவி விலகினார் இந்த நிலையில் ஜூலை 9ம் தேதியான இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் அதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சின்னாபின்னமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன