1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (11:16 IST)

தாயை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞர்! – அதிர்ச்சியில் உறைந்த ஸ்பெயின்!

ஸ்பெயினில் பெற்ற தாயையே கொலை செய்து சமைத்து சாப்பிட்ட இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடின் கிழக்கு பகுதியில் தனது தாயோடு வாழ்ந்து வந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமாஸ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தனது தாயுடன் நடந்த சண்டை ஒன்றில் ஆத்திரமடைந்த ஆல்பர்ட்டோ தனது தாயை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டி சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆல்பர்ட்டோவின் தாயின் தோழி ஒருவர் தனது தோழியை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆல்பர்ட்டோவின் வீட்டில் நடத்திய சோதனையில் பெண்ணின் உடல்பாகங்கள் கிடைத்ததை வைத்து தனது தாயை ஆல்பர்ட்டோ கொன்றதை உறுதி செய்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.