தொடர்புடைய செய்திகள்
- சேலையில் கவர்ச்சி காட்டும் தமன்னா.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
- மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!
- இமயமலையில் நிர்வாண வாழ்க்கை… நூடுல்ஸ் சமையல்- சர்ச்சையில் சிக்கிய வித்யுத் ஜமால்!
- கருப்பு நிற ட்ரஸ்ஸில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பிரியங்கா மோகன்!
- என் வலது கண்ணில் பார்வையை இழந்து வந்தேன்… டிவில்லியர்ஸ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!
கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது என்பதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையான நீங்கி மக்கள் நிம்மதியாக இருக்கும் நிலையில் திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக சிங்கப்பூர் அரசு தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
எனவே முக கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
