1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. School teach relationship with student in park

மாணவருடன் பூங்காவில் உடலுறவு கொண்ட இந்தியா வம்சாவளி ஆசிரியை

School teacher
28 வயது பள்ளி ஆசிரியை ஒருவர், 16 வயது கொண்ட மாணவருடன் திறந்த வெளி பூங்காவில் உடலுறவு கொண்டதால் தற்போது சிறைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.


 

பள்ளி மாணவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி, ஆசிரியைகள் தனது படுக்கையை பகிருந்து கொள்ளும் பழக்கும் வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், இதை சிறுவர்களுக்கு எதிரான குற்றம் என மேலை நாட்டு சட்டங்கள் சொல்கிறது. எனவே, அந்த ஆசிரியைகள் சிறைத் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அமெரிக்காவின் நியு ஜெர்சி மாநிலத்தில் அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நியுஜெர்சியில் உள்ள பெனிங்டன்னில் எனும் இடத்தில் செயல்படும் ஒரு பள்ளியில் அலீசியா மரி ரெட்டி (28) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 
 
இவர் 16 வயது மாணவர் ஒருவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவருடன் அவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. எனவே, அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது.
 
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மரி ரெட்டியை கடந்த 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி திருப்பம் - விஷால் வேட்பு மனு நிராகரிப்பு