1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Power cut to about 20 thousand homes

20 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் திடீர் துண்டிப்பு: அதிர்ச்சி காரணம்

powercut
ஹாங்காங்கில் திடீரென 20 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹாங்காங்கில் மின் கேபிள் பாலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் 20 ஆயிரம் வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
இந்த தீ விபத்து காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் உயரழுத்த மின்சார கேபிள்கள் சேதமடைந்து இருப்பதாகவும் இந்த சேதத்தை சரிப்படுத்தும் பணியை இரவு பகலாக மின்சார ஊழியர்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
மின் வினியோகம் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு