வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (15:47 IST)

இந்தோனேசியாவில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை!

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்போது அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ளன. இதனால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் யோக்யாகர்த்தாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 30 பேர் பலியாகி உள்ளனர்.