வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 மே 2020 (13:59 IST)

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீனாவில் கொரோனா!

ஊஹானில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. 
 
ஊஹானில் மார்ச் முதல் வாரத்தில் பாதிப்பு குறைந்த நிலையில், 76 நாள் ஊரடங்குக்கு கடந்த மாதம் 8 ஆம் தேதி விலக்கப்பட்டது. இந்தநிலையில், ஒரு மாதத்திற்கு பின் ஊஹானில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.